பௌர்ணமி நிலவே
என்னவளே!
என்னுள்
நுழைந்தவளே!
நீக்கமற நெஞ்சில்
நிறைந்தவளே!
நிலவொளியாய் கண்ணில்
படர்ந்தவளே!
வான்மேகத்தை பரிசாகத்
தந்தவளே!
தென்றலை தூதுவிட்டு தேடிவரச்
செய்தவளே!
தேனாற்றங்கரையில் காதல்
சொன்னவளே!
காதல் சொல்லிய என்
பௌர்ணமி நிலவே!
உன்னைத் தாலாட்ட வருவேன்
முழுநிலவொளியில்...!!