செஞ்சட்டைக்காரன்

குருதி வண்ணம் இறுதி செய்த பொதுமை வாதி!

மூளை முழுதும் பிரளய வாடை,
புரட்சி காற்றாய் பூமிப்பந்தில்!

நிகழ்கால வாழ்க்கை எல்லாம் எதிர்காலத் தடத்தில்,
புடம்போட்ட புனலாய்
பொதுவுடமைத் தணலாய்!

வறுமை சுரண்டல் பேதமெல்லாம்
நீ கடந்து வந்தன,
உன்னை கூட துரத்தின
உன் மூலதனம் விரட்டின...,

சுரணை பெற்ற சமூகத்துச் சொந்தக்காரன் நீ
செம்பரிதி சொல்லுக்கு அகராதி நீ விளிம்பு மக்கள் வாழ்க்கைக்கு மூலதனம் நீ!

இத்தனையும் சொல்லும் மூளை இன்று, சுயம் புரியா தளத்தில் நிர்மூல தனத்தில்...,
செஞ்சட்டைப் போட்டபடி
போராட்டக் களத்தில்
எழுச்சியோடு.....,

எழுதியவர் : சோழ வளவன் (23-Jul-21, 11:30 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 76

மேலே