சிவந்த நீர் - கலி விருத்தம்

கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு
சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று
ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

காச பித்தத்தாற் காந்தியு மேகிடும்
ஊச லுட்டிண முட்சுரங் காந்தலாம்
தாச தாதுவு நண்ணிடு மென்றுரை
வாச மில்சிவப் பாம்புனல் வண்மையே

- பதார்த்த குண சிந்தாமணி

சிவந்த நீரை அருந்தினால் இருமலால் தோன்றிய பித்தவுட்டிணம் விலகும். உட்சுரம் , உடல் எரிவு , விந்து இழப்பு ஆகியன உண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jul-21, 9:08 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே