முப்பொழுதில் மாலை

முப்பொழுதில் மாலை
இனியது
முக்கனியில் எதைச்
சொல்வது ?
முத்தமிழில் நாடகம்
இனியது
அது உன் விழிமேடையில்
காதலாய் அரங்கேறும் போது
முப்பொழுதும் எனக்கு
இனியது !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jul-21, 9:37 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே