முலைப்பால் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ன்’ ’ந்’ மெல்லின எதுகை)

தன்னியமென் றோதிற் சருவதோ ஷங்களும்போம்
உன்னிய தாபம் ஒழியுங்காண் - சந்நியொடு
வாதசுரம் பித்தசுரம் வன்கபச்சு ரந்தணியுங்
கோதில் வலிமையுண்டாங் கூறு 1

- பதார்த்த குண சிந்தாமணி

நேரிசை வெண்பா

இருந்தோஷம் போக்கும் இகற்கிரீச்சந் தீர்க்கும்
அருந்து மருந்தினனு பானம் - பொருந்துகின்ற
அஞ்சனத்திற் காகும் அறல்வறட்சி நீக்கிவிடும்
பஞ்சினடி மாத(ர்)முலைப் பால் 2

- பதார்த்த குண சிந்தாமணி

முலைப்பாலால் எழுவகை தோடங்கள், வெப்பம், வாத, பித்த கப சுரங்கள், முத்தோடம், வாதகிரீச்சரம், நாவறட்சி இவை நீங்கும். அனுபானத்திற்குப் பயன்படும். கூந்தல் வறட்சி பலமுண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jul-21, 6:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே