பாலைவனம்
வறண்ட பாலைவனம்
போல் உள்ள மனதில்
நாட்களும், நாழிகையும் நகர்வதில்லை.
இரு கண்கள் இணைவில்
பசுமை அடைந்த செடி போல்
நாட்களும், நாழிகையும் தெரிவதில்லை.
அருகே நின்று உரையாடும்
பலரின் முகம் பார்ப்பதில்லை,
நாட்களும், நாழிகையும் அவள் வருகை நோக்கி.
பிரிவுயுற்ற பின்
தன்னையும் மீறி கரையும் கண்ணீர்,
ஆகாய மழையுடன் இணைந்து விழுவதால்
நாட்களும், நாழிகையும் புரிதலுடன் இனி…….
புது யுகத்துடன்…….
வெள்ளூர் வை க சாமி