நெடுங்கணக்கு - 1

அரிதான பிறவி மானிடப் பிறப்பு
ஆகாத செயல்களை செய்யுதல் தவறு
இளமையில் தீச்செயல் எளிதில் அண்டும்
ஈடனம் (புகழ்) வேண்டின் திடமாய் உழை
உருளும் பொழுது ஒருபோதும் நிற்காது
ஊரின் போக்கிற்கு எதிராய் செல்லாதே
எல்லா நிலையிலும் உறுதியாய் நில்
ஏளனத்தைக் கண்டு ஒருபோதும் துவளாதே
ஐயம் வந்தால் ஆராய்ந்து தெளி
ஒவ்வொரு நொடியும் மனதின்படி செல்
ஓயாமல் புகழ்வரோடு ஒதுங்கப் பழகு
ஒளரபிரகமாய் (ஆட்டுமந்தை) வாழ்ந்தே மறையாதே
----- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (27-Jul-21, 7:50 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 68

மேலே