நெடுங்கணக்கு - 2

கல்வி கற்பது கற்பாய் வாழ்வதற்கு
காதல் இந்நாளில் காமத்தின் வடிகால்
கிழத்தன்மை முடிவே குழவியின் நிலைதான்
கீடம் (கிருமி) மூலமே உலகப்போர் மூளும்
குவலயம் என்பது மாயம் நிறைந்தது
கூட்டமாய் கூடினால் கலவரம் தோன்றும்
கெடவரல் (பெண்கள் கூட்டம்) நினைத்தால் பெரிய மாற்றம் வரும்
கேகலன் (கூத்தாடி) சொற்கள் மழையில் தோன்றும் வண்ணவில்
கையளவு பொறியில் உலகம் கட்டுண்டு கிடக்கும்
கொடுத்தவைகள் இனிமேல் திரும்பி வருதல் அரிது
கோபத்தைத் தூண்டும் முறையில் உலகம் இனி மாறும்
கெளபீனமாவது (கோவணம்) கட்டியே நீராடுதல் வேண்டும்
----- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (27-Jul-21, 7:51 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 76

மேலே