நெடுங்கணக்கு - 3

சனிப்பு (உற்பத்தி) இல்லா உயிர்கள் தேய்ந்து மறையும்
சாகாத எதுவும் உயிர்கள் இல்லை
சிவப்பு நிறத்தின் தாக்கம் வெகுதூரம் தெரியும்
சீரில்லா எதுவும் நெடுநாள் நிலைப்பது இல்லை
சுத்தம் பேணுவோர் வாழ்வில் உணவின் குறையில்லை
சூழலில் வாழ முனைவோருக்கு துன்பமே இல்லை
செயலாற்றும் முறையாலே சிறப்புகள் வந்து சேரும்
சேவை செய்வதை எல்லோரும் விருப்புவதே இல்லை
சைகை குறியே ஆதியின் மனித மொழியே ஆகும்
சொல்லின் பொருட்களாலே மொழியின் தரம் உயரும்
சோதிக்காத எதுவும் சாதனை புரிவதில்லை
சௌக்கியம் அடைவது உழைப்பினால் இருக்கட்டும்
----- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (27-Jul-21, 7:52 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 93

மேலே