நாவல் நீர் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
நாவல்வேர் ஊறுசலம் நாளுமதி சாரத்தை
மாவலிய மேகத்தை மாற்றுங்காண் - பூவுலகில்
விந்தோ(டு) அதிசீதம் வீறுபலம் வெப்பையம்
மந்தமிவை யுண்டாக்கு மால்
- பதார்த்த குண சிந்தாமணி
நாவலின் வேர் ஊறிய நீர் பெருங்கழிச்சல், பித்தம், மது மேகம் இவற்றை நீக்கும்; விந்து பெருகும்; உடல் குளிரும்; உடல்பலம் பெறும்; சுரம், சிலேட்டுமம், அக்கினி மாந்தம் இவை உண்டாகும்