நாவல் நீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நாவல்வேர் ஊறுசலம் நாளுமதி சாரத்தை
மாவலிய மேகத்தை மாற்றுங்காண் - பூவுலகில்
விந்தோ(டு) அதிசீதம் வீறுபலம் வெப்பையம்
மந்தமிவை யுண்டாக்கு மால்

- பதார்த்த குண சிந்தாமணி

நாவலின் வேர் ஊறிய நீர் பெருங்கழிச்சல், பித்தம், மது மேகம் இவற்றை நீக்கும்; விந்து பெருகும்; உடல் குளிரும்; உடல்பலம் பெறும்; சுரம், சிலேட்டுமம், அக்கினி மாந்தம் இவை உண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jul-21, 7:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே