சில்லென்ற காதல் மாலைப் பொழுது

நேரிசை வெண்பா



உல்லாச மாலையில் ஊஞ்சலில் ஒன்றாக
சில்லென நாங்க ளிருந்தோமே -- இல்லாமை
கொல்லு மவனாலித் துன்பமான மாலையும்
செல்லவெறுப் பாம்வாழ்க்கை யின்று


அவனென்னுடன் இருந்த மாலைப் பொழுதெல்லாம் சில்லென மகிழ்வாய்
சென்றது. இன்றோ அவனில்லா மாலை துன்பமும் வெறுப்புமாக
வாழ்க்கை கடினமாக செல்கிறது.


காமத்துப்பால்

குறள் 3/15.


............

எழுதியவர் : பழனி ராஜன் (30-Jul-21, 6:47 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 62

மேலே