சில்லென்ற காதல் மாலைப் பொழுது
நேரிசை வெண்பா
உல்லாச மாலையில் ஊஞ்சலில் ஒன்றாக
சில்லென நாங்க ளிருந்தோமே -- இல்லாமை
கொல்லு மவனாலித் துன்பமான மாலையும்
செல்லவெறுப் பாம்வாழ்க்கை யின்று
அவனென்னுடன் இருந்த மாலைப் பொழுதெல்லாம் சில்லென மகிழ்வாய்
சென்றது. இன்றோ அவனில்லா மாலை துன்பமும் வெறுப்புமாக
வாழ்க்கை கடினமாக செல்கிறது.
காமத்துப்பால்
குறள் 3/15.
............