வார்த்தை எனும் ஆயுதம்

வாள் கொண்டு வீசியிருந்தால்
வலி கொண்டு இருந்திருக்க
மாட்டேன் பெண்ணே...

வாளினும் கூரிய வார்த்தை
கொண்டு வலியதனை
வாரித்தந்ததும் ஏனோ?...

வாழ்க்கையின் வழி
தெரியாது வருத்தங்கள்
சூழும் வேலைதனில்
நீ வாரி இறைக்கும் வார்த்தைகள்
எல்லாம் மீளா துயர்தனில் தள்ளும்
என அறியாயோ பெண்ணே ...

வாழும் வாழ்க்கைதனில்
வாரியணைத்து வருடும்
வார்த்தைகள் இல்லாவிடினும்
வலிதோய்க்கும் வார்த்தைகள்
வார்க்காது போனால் சுகமே...

நீ உதிர்க்கும் கோபசொல்கள்
எல்லாம் என்னை மட்டுமன்றி
உன்னையும் , நம் வாழ்க்கையும்
பிளந்து சிதைக்கும் ஆயுதம்
என அறிவாயோ பெண்ணே ...

இவன்
மகேஸ்வரன்.கோ ( மகோ)
+91 -98438 -12650
கோவை-35

எழுதியவர் : மகேஸ்வரன்.கோ ( மகோ) (30-Jul-21, 9:07 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 575

மேலே