காதலின் கொலைஞ்சன்

நேரிசை வெண்பா


ஒன்றுபட்டு யாங்கள் உலவிவந்த மாலைபோது
அன்றுயிர் காக்க தழைத்தது -- துன்பிரிவில்
கொன்றுயிர் வாங்கும் கொலையனா யிம்மாலை
இன்று வரயென்செய் வேன்

காதலனுடன் கூடிடும் மாலைவேளை யென்னுயிர் பசுமையாய்
தழைக்க வந்தது. என் காதலர் பிரிவில் இப்போது அந்த மாலை
வரும்போதெல்லாம் என்னுயிர் பறிக்க வாளுடன் வரும் கொலைஞ்ச
னாகத் தெரிய நான் யென் செய்வேன்



காமத்துப்பால் குறள். 4/15

............

எழுதியவர் : பழனி ராஜன் (31-Jul-21, 8:09 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

மேலே