பதில் கூறாய்
ஆயிரமாயிரம்
ஆடிப்பெருக்கு
ஆற்றுவெள்ளமாய் - உன்
அழகிய விழிகளின் வெள்ளம் -
அதில் நான் - மூழ்கி -
அழகிய தமிழ் வெள்ளமென மாறிடவா ?
அல்லது அதனுள்ளே மூழ்கி முத்தாகவா?
அரவணைத்து அரணாகும் பூவே -
அன்பெனும் வெள்ளம் சூழ்ந்த தீவே !!!
- பதில் கூறாய் -
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி