அகத்தியர் கண்ட இரத்தப் புற்று நோய்
அறு சீர் விருத்தங்கள்
காய். காய் காய் காய். காய் காய்
!
சொன்னேன்நான் சிவனானை உலகத்துள்ளே
சொல்லாதே பாவம்வரும் தூசணிப்பார்
முன்னேநா னாயிரத்திற் சொன்னசூட்சம
மோசமில்லை யதையறிந்தே யிதனை(ச்)செய்வாய்
பின்னேநீ வேறுவழி புகுந்தாயானால்
பெலமில்லை கல்லுப்பு பிசகிப்போகும்
வின்னமது வாராமல் நூலை (க்,)காத்து
வேதமிந்த சாத்திறத்தை வெளியிடாதே
அகத்தியரும் மோனை தவறா எழுதியுள்ளார்
1 ஆம் சீர். நாலாம் சீரில் தவறாமல் மோனையுள்ளது
அறுசீர் விருத்தம்
விட்டதினா லாவதென்ன வென்றுமீறி
விழிகெட்ட குருடரைப்போல வெளியி(ல்)விட்டால்
அட்டதுட்டர் சென்னியிலே புத்துமேவும்
ஆயிரத்தெட் டுகோடி நரகி (ல்,)வீழ்வார்
மட்டியவர் புத்திகளை விட்டுநீயும்
மகத்தான சூத்திரத்தை வணங்கி(க்)காப்பாய்
கட்டினேன் வாதம்பன் ரண்டுநூறு
கருதினேன் சகலகலைக் கியான(, ம்) பாரே
அகத்தியரும் மோனை தவறா எழுதியுள்ளார்
1 ஆம் சீர். நாலாம் சீரில் தவறாமல் மோனையுள்ளது
பாட்டின் விளக்கம்
இந்த குறிப்பை உலகத்திற்கு சொல்லாதே பாவம் வரும்
முன்னே நான்சொன்ன ஆயிரம் பாடலையும் பிசகாது
மோசம் வராது அந்த சூட்சத்தை பின்பற்று செய்வாய்.
நீ வேறு வழியில் போனால் கல்லுப்பு வராது பிசகிப்போம்.
நான் சொன்னதைக் கேளாது பலருக்கும் வெளி விட்டால்
அவர்களது இரத்தத்தில் புற்று நோய்க் வந்தும் ஆயிரத்தெட்டு முறை
தவறாது நரகத்திற்கே தள்ளப் படுவார்கள் என்கிறார்?
இரத்தப் புற்றநோய் விஞ்சான உலகில் கண்டு பிடித்து நாற்பது
ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் அகத்தியர் பல ஆயிரம்
ஆண்டு களுக்கு முன்னமே சென்னியிலே (சிகப்பான இரத்த நீரிலே)
புத்து (, புற்றுநோய்) மேவும்(வரும்) என்று சொல்லியதைப் பாருங்கள்