சாரல் மழையில் ஓர் அழகான காதல்
ஓர் அழகான மாலைப்பொழுதில்...
பேருந்தின் வரவை நோக்கி காத்திருக்க...
சாரல் மழையோ உன் மீது கீதம் பாட..
நானோ அத்திபூத்தாற் போல்
உன் முன் வந்து நிற்க...
எனைப் பார்த்ததும் உனையறியாமல்...
சாரல் மழையின் கீதத்தில்
களைந்திருந்த ஆடையை சரிசெய்ய..
நானோ கருநிற துணிப் போர்த்திய
குடையாய் உன்னருகில் வர...
உன் ஈர மேனியெங்கும் நடுநடுங்க...
ஆரணிப்பட்டில் தீட்டப்பட்ட அழகு மயிலாய் நீ இருக்க...
அள்ளி அணைக்கத் தூண்டும் உன்னழகில் நான் மயங்க...
உன் பூமலர்ந்த முகமதை சாரல்
துளிகள் தொட்டுத் தழுவ...
என் குடையதில் உனக்குப்
பாதி இடம் கொடுக்க...
உன் விழிகளிரண்டும் எனைப் பார்க்க...
என் கரங்களிரண்டும் உனை அணைக்க...
வெட்கத்தில் இருவர் முகமும்
சிவந்து போக...
சாரல் மழையில் சங்கதி பாடுது...
மனதை கொள்ளை கொடுத்த
இரு உள்ளங்கள்...!!