ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு
😷😷😷😷😷😷
பொதிகையிலே பிறந்து வரும்
புத்தம் புது காவிரியே
இரு நிலம் சண்டை மீண்டு
வரும் உன்னை வணங்கினாலும்

ஆடிப் பெருக்கன்று
ஆனந்தக் குளியலுற
ஓடோடி வந்த நானும்
ஒரு நொடியில் திகைத்து விட்டேன்

கரைமுழுக்க காவல் துறை
கவசமதை அனிந்து கொண்டாய்
தொற்றுக்கு பயந்து போயே
கற்றுக்கொண்டாய் மனிதர் போல

ஆறடங்கு போட்டாலும்
அணைதாண்டி தவறு செய்தாய்
கரைதாண்ட வந்த என்னை
கைகழுவி விட்டு விட்டாய்

நீராலே இடைவெளியில்
நீ நிற்க மறுத்தேதான்
கடலோடு உறவாட
கலவாதா பெருந்தொற்று ?

எண்ணெய் தேய்த்து தலை முழுக
எண்ணி நானும் வந்த போது
என்னையே தலை முழுக
எண்ணி நீயும் மறுத்து விட்டாய்

கடவுளே கதவடைத்து
காட்சி தர மறுக்கையிலே
உன்னை மட்டும் குறைசொல்லி
ஒன்றும் இங்கே ஆவதில்லை...
🌫️🌫️🌫️🌫️🌫️🌫️🌫️🌫️🌫️🌫️🌫️

எழுதியவர் : க.செல்வராசு (5-Aug-21, 4:49 am)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 68

மேலே