காட்சிகள் மாறும்
காட்சிகள் மாறும்.
காட்சி -1
கன்னி ஒருத்தி
கன்னத்தை மெருகேற்றி,
கண்ணுக்கு மை தீட்டி
காதிலே சிமிட்டி மாட்டி,
கார்முகிலில் பூவும் சூட்டி
கண்களால் கை அசைத்தால் என்னவளே என்பேன் அன்று.
காட்சி -2
பாவலன் ஒருவன், சொற்களை பூவாக்கி கொத்தாக்கி,
பாமாலை ஒன்று கட்டி,
கற்சிலை மேல் சூடக் கண்டால்,
மெய்மறந்து நிற்பேன் இன்று.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.