5 சின்னமணி கண்மணிக்கு - தாத்தா பேத்தி தாலாட்டு - 5

இந்த கவிதையின் பாடல் காணொளியை youtube இணைய தளத்தில் காணலாம்
https://youtu.be/mfPrQxdErFU
5 . சின்னமணி கண்மணிக்கு - தாத்தா பேத்தி தாலாட்டு - 5
சின்னமணி கண்மணிக்கு
எந்த கீதம் பாடுவதோ
எந்தன் சின்னமணி கண்மணிக்கு
எந்த கீதம் பாடுவதோ
சின்ன இதழ்கள் மலர்கையிலே
எந்தன் உள்ளம் பறக்குதடி - உந்தன்
சின்ன இதழ்கள் மலர்கையிலே
எந்தன் உள்ளம் பறக்குதடி -
எந்தன் சின்னமணி கண்மணிக்கு
எந்த கீதம் பாடுவதோ

தாலாட்டி தூங்கவைக்க
காலமெல்லாம் காத்திருந்தேன் - உன்னை
தாலாட்டி தூங்கவைக்க
காலமெல்லாம் காத்திருந்தேன்
இன்று தாலாட்டும் வேளையிலே
வார்த்தை இன்றி நான் தவித்தேன் - உன்னை
தாலாட்டும் வேளையிலே
வார்த்தை இன்றி நான் தவித்தேன் - எந்தன்
சின்னமணி கண்மணிக்கு
எந்த கீதம் பாடுவதோ

ஆராரோ பாட்டுப் பாடி
மகிழ்வுடனே தூங்க வைப்பேன் - உன்னை
ஆராரோ பாட்டுப் பாடி
மகிழ்வுடனே தூங்க வைப்பேன்
இனி அராரோ வந்து உன்னை
தூக்கும்போது நான் பதைப்பேன்- உன்னை
அராரோ வந்து இனி
தூக்கும்போது நான் பதைப்பேன் - எந்தன்
சின்னமணி கண்மணிக்கு
எந்த கீதம் பாடுவதோ

தள்ளாடும் வயதினிலும்
மகிழ்வுடனே உனை சுமப்பேன் - இனி
தள்ளாடும் வயதினிலும்
மகிழ்வுடனே உனை சுமப்பேன்
கண்ணில் நீரும் பெருகியதே
உனைபிரிவேன் என நினைக்கையிலே - எந்தன்
கண்ணில் நீரும் பெருகியதே
உனைபிரிவேன் என நினைக்கையிலே

சின்னமணி கண்மணிக்கு
எந்த கீதம் பாடுவதோ
எந்தன் சின்னமணி கண்மணிக்கு
எந்த கீதம் பாடுவதோ
சின்ன இதழ்கள் மலர்கையிலே
எந்தன் உள்ளம் பறக்குதடி - உந்தன்
சின்ன இதழ்கள் மலர்கையிலே
எந்தன் உள்ளம் பறக்குதடி -
எந்தன் சின்னமணி கண்மணிக்கு
எந்த கீதம் பாடுவதோ

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (5-Aug-21, 8:50 pm)
பார்வை : 26

மேலே