நான் நெனச்சமாறியே

நான் நெனச்சமாறியே
நெனச்சமாறியே ...
நெஞ்சுக்குள்ளே நீ தான்
நீ தான்
குடி யேறினாயே ...

அந்த அழகுக்காட்சிகள் யாவையும்
காதல்கண்கள் காட்டாதோ ...
அது கனவுகளை வரச்சொல்லி
கேட்காதோ ...

நிழலழகே நெஞ்சத்தை கொஞ்சமாய் மயக்கும்போது
நேரழகு என்னையென்ன வாட்டாமல் விட்டுவிடுமோ...?

இந்த சுத்தமான நெஞ்சுல என்ன
குத்தத்த கண்டயொ...?
பாக்காம பேசாம ஏன் தான்
நீ போறயொ...?

இருள் இல்லாம வெளிச்சம் தான்
ஏதோ...?
நிழல் காட்டாத வெளிச்சமும் தான்
ஏதோ...?
'மாலைமதி' ஒன்று
காலை வானம்விட்டு வந்து
கையில் கிட்டாதோ ...

வேர்வை மழையில் உன்னை நீராட்டவே...
கொஞ்சும் மோகத்தில் உன்னை
சீராட்டவே ...
புதுப்பாடல் வரியில் அழகை பாராட்டவே ...
காற்றுக்குழல் ஓசையில் உன்னை
தாலாட்டவே ...

பாத்திருக்கவே...காத்திருக்கவே ...
காதலே காதலே...
முழு காதல் தானே ...

எழுதியவர் : BARATHRAJ M (5-Aug-21, 10:05 pm)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 149

மேலே