கலைந்தாடும் கூந்தல் காதல் ராகம் பாட

மாலையின் மௌன கீதம்
மஞ்சள் வானம் தீட்டுது அந்தி ஓவியம்
காற்றிலாடும் மாலை மலர்களின் வாசம்
கவிதை மொழிகள் பேசும் கிளிகள் கூட்டம்
கலைந்தாடும் கூந்தல் காதல் ராகம் பாட
கனவு கலைந்து விடாமல் இமையில் ஏந்தி நீயும் வந்தாய்
மஞ்சள் நிலாத்தோழியும் வந்து விட்டாள்
நாம் சேர்ந்து நடப்பதை வாழ்த்திப் பாட !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Aug-21, 9:54 am)
பார்வை : 160

மேலே