உனக்குள் ஏன் இத்தனை குழப்பம்

உனக்குள் ஏன் இத்தனை குழப்பம்;
உருவாக வேண்டாம் உனக்குள் குழப்பம்.
உருவாகும் குழப்பம்;
உறங்கவிடாது உன்னை கெடுக்கும்.

எச்சத்தில் வந்த உடம்பு;
அச்சம் வந்தால் அமைதிதான் போகும்.

பிச்சல் பிடுங்கள் வாழ்கையில்,
பிடிவாதம் பெரும் வாதம்.

பிடித்து நிறுத்த முடியாத யாக்கையில்,
பிடிவாதம் எதற்கு?

சோகத்தில் இல்லை சுகம்;
சோம்பலில் இல்லை யுகம்;
உடல் சோர்வு உன்னை வருத்தும்;
மனச்சோர்வு மறைந்திருந்தே கொல்லும்.

சாபத்தில் இல்லை தோல்வி;
சாய்ந்து கிடந்தால் கிடைப்பதில்லை வெற்றி;
சாதிக்க உனக்கு வேண்டும்,
மன உறுதி;
சாயத்தை பூசினால் கிடைக்காது வெற்றி.
முடங்கிக்கிடந்தால்,
முழுதாய் வந்து கூடுகட்டும் சிலந்தி.

விழித்திருகாதவனுக்கு விடுதலை இல்லை;
விழித்திருப்பவன் விழுவதில்லை;
விழிப்புணர்ச்சியுடன் இருப்பவன் ஏமாறுவது இல்லை.

மூளையில் ஏறவில்லை என்றாலும்,
மூலையில் முடங்கிக்கிடக்காது முயற்சி செய்.

புரியவில்லை என்ற வார்த்தை வேண்டாம்;
முடியவில்லை உனது முயற்சி
மடியவில்லை உனது எழுச்சி
முறியவில்லை உன் வெற்றி

விளக்கு இருட்டை விரட்டாமல் இருப்பதில்லை,
விடுதலை பிறக்காமல் இருப்பதில்லை,
வெற்றியுடன் தோல்வி பிறக்காமல் இருப்பதில்லை.
முயற்சியை விடாதே

கிலிபிடித்தாலும்,
பேய் பிடிப்பதில்லை;
கிருக்குபிடித்தாலும்;
கிரகம் பிடிப்பதில்லை
நேரம் சரியில்லை என்று
நேத்திக்கடன் போடாதே.
நேரம் பார்த்து செயல் பாடலாம் என்று,
நேரத்தை வீணடிக்காதே .
நேர்த்தியாக செயல்பாடு,
நேரம் தானே கை கூடும்.

சிரமமும் சிகரம் தான்;
சிந்தும் கண்ணீரால் கழுவ முடியாது சிரமத்தை;
சிந்தித்து செயல்படு.
சிரமமும் சிறுசெவராகும்,
உரம் என்னும் உலியை மனதில் பிடித்தால்,

சவாலை சாதனையாக்க முயலு,
சளிப்பு வேண்டாம்;
விழிப்பு வேண்டும்;
களைப்பு இருந்தாலும்,
களிப்பு வேண்டும்… பங்களிப்பு வேண்டும்.

நம்பிக்கை விளக்கை ஏற்று
சரித்திரம் படைக்கும் உனது
சாதூர்யம்;

வாழப்பிறந்தவர்கள்,
வழுக்கி விழப்பிறக்கவில்லை,
விழிப்புணர்சியுடன் இரு,
விடியும் உன் வாழ்க்கை.

முடங்கிக்கிடந்தால் முழுதாய் வந்து ,
கூடுகட்டும் சிலந்தி,
விழித்திருபவனுக்கு விடுதலை என்றும்.
முடியவில்லை உன் வெற்றி;
மடியவில்லை உனது முயற்சி.

சோம்பேறித்தனமும் சோகமும் சோறு போடாது;
சுறுசுறுப்பாக இரு
சுற்றத்துடன் இரு.

மனஅழுத்தம்
மனிதனைக்கிடத்தும்
மனச்சோர்வு வேண்டாம்,

மனம் என்னும் சோலையில்
பூத்துக் குலுங்கட்டும் அன்பு.

சிந்தனை தடுமாற்றம் எதற்கு,
உனக்குள் இத்தனை, சீற்றமும் எதற்கு,

ஓடும் உன் வாழ்க்கை, ஒருநாள் அடக்கும்,
இருக்கும் நாட்கள் சிலவே
இதில் வேணடாம் உனக்குள் இத்தனை ஏமாற்றம்.

உன்னை பிடித்து ஆட்டவேண்டாம்,
பேராசை என்ற பேய்;

உணவு இல்லை என்றாலும்,
உன் உள்ளத்தில் வேண்டாம் ஊணம்.
பலம் இல்லாவிடினும்,
பலவீனம் வேண்டாம்;
பணம் இல்லை என்றாலும்
பாசம் தான் தாய்,

ஆணவம், சினம், பொறாமை, காமம், பெருந்தீனி, சோம்பல், பேராசை,
என்ற ஏழு பெரும்பாவங்கள் வேண்டாம்

உனக்குள் ஏன் இத்தனை ஆணவம்;
தன்மானம் இருக்க தவிப்பு எதற்கு;

அடக்கமாய் இருப்தை அடங்கிக்கிடப்பதாக நினைக்காதே.

மனத்திற்கு வேண்டாம்
இத்தனை வேதனை;
மனசார வாழ்த்தாவிட்டால்
வந்துவிடும் பிரிவு
விழுந்துவிடும் பரிவு

உதவாத சிந்தனை
உறவாடிக்கெடுக்கும்.

உறங்காத விழிகள்
உடன்பட மறுக்கும்;
பிடிவாத குணம்,
பிடித்தேகெடுக்கும்

மறையாத மோகங்கள்;
மடித்துத்தான் விடும்.

புறத்தூய்மை
புனிதத்தால் வரும்;
அகத்தூண்மை
வாய்மையால் வரும்.


அடி உதையில் இல்லை வெற்றி
அடங்கிப்போவதில்லை கௌரவம்
அடிமைத்தனத்தில் இல்லை சுதந்திரம்

இழப்பு ஈட்டிவருவதில்லை;
இழவு அழுதால் போவதில்லை
இழப்புக்கு ஈடு இல்லை
உழைப்புக்கு ஈடு ஏதும் இல்லை

பிறப்பு கேட்டுவருவதில்லை;
பிழைப்பை கெடுப்பதனால் இழப்பு போவதில்லை
இழப்பை ஈடு செய்ய மனதில் அமைதி தேவை
இளம் வயதில் கோபம் தேவையில்லை

உபச்சாரத்திற்கு வேண்டும்;
உண்மையான உள்மனம்
உடன்பாடு இல்லாத வாழ்வில் உண்மை இல்லை.
உற்றார் சுற்றார் இல்லாமல் குடும்பம் இல்லை
உற்வவுக்கு வேண்டாம் துணை
உறவாட வேண்டும் துணை .

மனக்கதவு ஒரு
மர்மக் கதவு;
மறைமுகமான கதவு,
திரையிடப்படாத கதவு,
திருடனாய் திறக்கும் கதவு,
திறவுகோல் தேவையில்லை.
மனத்தூய்மை மாற்றும் உன்னை;
அது ஈட்டும் உனக்கு பெருமை
உற்சாகம் இல்லை என்றல்,
உடல் இருந்தும் ஊணம் படைத்தவன்; நீ

ஆறாச்சினம்
அறிவை மழுக்கும்;
அறியாமை உன்னை அழிக்கும்.

நுண் உயிர்தான் உன் உயிர்;
நுழைந்து கிடப்பது உடலில்.

நூலுக்குத்தேவை ஊசி,
நுண்ணறிவுக்குத் தேவை உன் அறிவு.

முடிவில் உண்டு துவக்கம்,
முடிவதில்லை உன் முழக்கம்,
முடிவதில்லை உன் போராட்டம்.
முற்றுப்புள்ளி இல்லையோ உன் ஆற்பட்டததிற்கு.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (11-Aug-21, 1:43 pm)
பார்வை : 297

மேலே