யாருக்கான தலைவர் காந்தி

யாருக்கான தலைவர் காந்தி?????

புரட்சி இயக்கங்களை எல்லாம் மழுங்கடித்து வன்முறையற்ற வழியன கூறி சத்யாகிரகம் என்ற முட்டாள்தனமான பாதையை நோக்கி இந்திய சுதந்திரப் போராட்டத்தை திசை திருப்பியவர் காந்தி.

எப்போதும், எல்லாவற்றிலும் காந்தி இந்து மதத்தை நுழைத்தார். இதன் காரணமாக ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு அவர் உடந்தையாக செயல்பட்டார்.

ஆகவே காந்தி என்பவர் பிரிட்டிஷ்  அரசின் ஏஜென்ட், தரகர். காந்தி குறித்த இத்தகைய கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது, பாகிஸ்தானை சேர்ந்த தலைவர்களோ, புரட்சி பாதைகளை முன்னெடுக்கும் இடதுசாரி இயக்கங்களோ அல்ல.  ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி. அதுவும் ஒரு உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி. இந்திய பத்திரிகையின் மன்றத்தின் முன்னாள் தலைவருமான திரு.மார்கண்டேய கட்ஜு.

காந்தி மீதான கட்ஜுவின் இந்த விமர்சனத்தால் நாடே கொந்தளித்தது. அரசியல் தலைவர்கள் அனைவரும் கண்டனக் குரல்களை எழுப்பினர். அரசியல் களமே அல்லு சில்லானது என்றெல்லாம் சொல்வதற்கில்லை.
காந்தி மீதான விமர்சனங்களில் பத்தோடு பதினொன்றாகவே ஆங்கிலேயரின் தரகர் தான் காந்தி என்று கட்ஜுவின் விமர்சனமும் பார்க்கப்பட்டது.

காந்தி மீது விமர்சனம் வைக்கப்படுவது இது ஒன்றும் புதிதல்ல. வரலாறு முழுவதும் விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் காந்தியை நிழல் போல் தொடர்ந்து வந்தது.

காந்தி தான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார். காந்தி தான் இந்தியாவின் தேசப்பிதா. காந்தியம் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் சர்வ ரோக நிவாரணி. காந்தி தான் அகிம்சையின் அடையாளம். இந்தியாவின் அடையாளமும், முகமும் கூட அவர் தான். இப்படியான காந்தி குறித்த சித்திரங்கள், பால பாடத்திலிருந்து இந்தியர்கள் அனைவருக்கும் சொல்லித் தரப்படுகிறது.

அதே வேளையில், காந்தியின் அகிம்சை முறையிலான போராட்டத்தால் தான் இந்தியாவின் சுதந்திரம் தாமதம் ஆனது. பொதுயுடைமை சிந்தாந்தம் இந்தியாவில் தலை தூக்காமல் பார்த்துக்கொள்ளும் பொருட்டே, பிரிட்டிஷ் அரசு காந்தியை தூக்கிப் பிடித்தது என்பது போன்ற குற்றசாட்டுகளும் காந்தி வாழ்ந்த காலத்திருந்தே முன் வைக்கபடுகின்றது.
ஒரு முனையில் இந்திய சுதந்திர போராட்டத்தின் ஹீரோவாக முன் நிறத்தப்படும் அதே காந்தி தான், விடுதலை போராட்டத்தின் வில்லனாகவும் சிலரால் கருதப்படுகிறார்.
அப்படியானால் உண்மையில் காந்தி என்பவர் தான் யார்? அவருடைய சிந்தாந்தம் தான் எத்தகையது.

நேதாஜி போன்ற பிற தலைவர்களின் தியாகங்களை அவர் இருட்டடிப்பு செய்தாரா?
பகத்சிங்கின் மரண தண்டனையை அவர்
தடுக்க முயலவில்லைய என்பது உண்மையா?
சாதியை ஒழிக்க காந்தி மேற்கொண்ட முன்னெடுப்புகள் என்னென்ன?
காந்தி ஒரு இந்துத்துவவாதியா? அப்படியானால் இந்து மதத்தை சேர்ந்தவராலேயே அவர் சுட்டு கொல்லப்பட காரணம் தான் என்ன? இப்படியான காந்தி குறித்து அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. அக்கேள்விகளுக்கெல்லாம் முடிந்தவரை விடை கானும் சிறு முயற்சியே இந்த கட்டுரை.
அப்போது காந்தி யாருக்கான தலைவர்?

1915 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற நபர் இந்தியா திரும்பிய போது அவருக்கு வயது 45. அப்போது இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த காங்கிரஸ் இயக்கம் தொடங்கப்பட்டு 29 வருடங்கள் நிறைபெற்றுயிருந்தது. அன்றைய காங்கிரஸ் இயக்கமானது, இந்தியாவின் மேற்கே கொஞ்சம், கிழக்கே கொஞ்சம், தெற்கில் கொஞ்சம் என்று பம்பாயிலும், கல்கத்தாவிலும், சென்னையிலும் ஆங்கிலம் பேசும் உயர்க்குடி வர்க்கத்தினரின் இயக்கமாகவே இருந்து வந்தது. கூடவே இந்துத்துவ, உயர் சாதிய ஆதிக்க பிடியிலும் காங்கிரஸ் இயக்கம் இருந்தது.
அப்படியான காங்கிரஸ் இயக்கத்தை ஆதிக்க மனநிலை படைத்தவர்களிடமிருந்து மீட்டு காங்கிரஸை இந்தியா முழுவதும் இருக்கும் வெகுஜன மக்களின் இயக்கமாக மாற்றிய பெருமை மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியையே சாரும் என்றால் அது மிகையாகாது.

பிற்படுத்தபட்டவர்கள், தாழ்த்தபட்டவர்கள், இஸ்லாமியர்கள், சிறுபான்மையர்கள் என அனைத்து தர மக்களிடமும் காங்கிரஸை கொண்டு சேர்த்தார் காந்தி. இத்தனைக்கும் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி பொறுப்பு வகித்தது வெறும் ஒரு வருடம் மட்டும் தான். ஆனால் தனது தனித்த ஆளுமையால் வெகு விரைவிலேயே காங்கிரஸின் முகமாகவே  மாறினார் காந்தி.

தன்னை மட்டுமே முன்னிருத்தாமல், இயத்திலிருந்த பிற தலைவர்களுக்கும் சமமாக வாய்புகள் வழங்கினார். இந்திய சுதந்திர போராட்டதிற்கு பொது மக்களை ஒன்று திரட்ட கட்சியில் நேரு போன்ற தலைவர்களை மிக நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டார். இரண்டாம் கட்ட தலைவர்களை ஊக்கிவித்தார். விளைவு, வெகு விரைவில் இந்திய மக்கள் அனைவரையும் இந்திய சுதந்திர போராட்டம் என்ற ஒற்றை குடையின் கிழ் ஒன்றிணைத்து கொண்டு வந்தார் காந்தி. இவை அனைத்திற்கும் மேலாக சாமானியர்களும் வெகு எளிதில் அனுக கூடியவறாக காந்தி இருந்தார்.

மேலும் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சுரண்டலுக்கு உள்ளானவர்களுக்கும் காந்தி ஆதராவாக செயல்பட்டார். அப்படியானால் வரலாறு முழுக்க அவர் விமிர்சிக்கபட்டே வர என்ன காரணம் என்ற கேள்வி நம்மிடையே எழுகிறது. அதற்கு விடை காண காந்தி மீதான விமர்சனங்களிலிருந்தே அவரை அறிய முடியும் என்பது சரியாகும்.

தென்னிந்தியாவில் காந்தியை அதிகம் விமர்சித்தவர்களுள் முக்கியமானவர் தந்தை பெரியார். தொடக்கத்தில் காந்தி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸில் இணைந்து பணியாற்றிய தந்தை பெரியார், காந்தியின் கொள்கைகள் சாதியை ஒழிப்பதும், பார்பணிய ஆதிக்கத்தை அகற்றவும் உதவாது என்று பின்னர் முடிவெடுத்து,1925 ஆம் ஆண்டு, காங்கிரஸிலிருந்து விலகினார். அன்று தொடங்கி, காந்தி இறக்கும் வரை காந்தியத்தையும், காங்கிரஸையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியும், எழுதியும் வந்தார். ஆனால் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி காந்தி படுகொலை செய்யபட்டபோது, அந்த செய்தி பெரியாரை மிக பெரிய அளவில் பாதித்தது. காந்தியின் படுகொலை குறித்து தன் கண்டனத்தை எழுத்திலும், பேச்சிலும் எதிரொலித்தார். இந்தியாவுக்கு " காந்தி தேசம்" அல்லது
" காந்திஸ்தான்" என பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பெரியார், இந்து மதத்திற்கு 'காந்தி மதம்' என பெயர் மாற்றலாம் என யோசனை கூறினார். மேலும் தமிழகம் முழுவதும் காந்தியின் மறைவிற்கு அனுதாப கூட்டங்கள் நடத்த வேண்டும் என கேட்டு கொண்டார். வர்ணாஸ்ரம் ஆதரவு, திராவிட நாடு எதிர்ப்பு இந்த காந்தியின் இந்த இரண்டு கொள்கைகளை தவிர காந்திக்கும் தனக்கும் பெரிய அளவில் கருத்து வேறுபாடு கிடையாது என்றார் தந்தை பெரியார்.
' உத்தமரை இழந்தோம், உலகெமெங்கும் அழு குரல்' என்று அண்ணா காந்தி மரணத்தின் போது கூறினார்.

தென் இந்தியாவில் காந்தியை அதிகம் விமர்சகத்தது பெரியார் என்றால், வடக்கில் காந்தியை மிக கடுமையாக விமர்சனம் செய்தவர் டாக்டர். அம்பேத்கர்.
காங்கிரஸ் சுதந்திரத்திற்காக போராடுகிறது என்றால், அது யாருடைய சுதந்திரத்திற்கு போராடுகிறது என்று கேட்டார் அம்பேத்கர். நீங்கள் எங்களை சார்ந்தவராக இல்லாத போது, எங்கள் வேதனைகளை நீங்கள் அறியாதவராக உள்ளபோது, உங்களுக்கு எப்படி எங்களின் துயரம் புரியும் எனவும் காந்தியிடம் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு காந்தி அளித்த பதிலிருந்து சாதிய ஏற்ற தாழ்வுகளுக்கு எதிரானவர் காந்தி என்பது புரிந்து கொள்ளலாம். காந்தி சொன்ன பதில் இது தான் நான் எந்த மதத்தை சேர்ந்தவன் என்பதை முடிவு செய்வதில் என்னுடைய பங்கு எதுவுமே இல்லை. ஆனால் கழிவுகளை அகற்றும் வேலைகளை செய்வதற்கு ஒருவர் பிறந்த சாதி தான் அடிப்படை என்றால் அடுத்த பிறவியில் நான் ஒரு மலம் அல்லுபவரின் வீட்டில் பிறக்க விரும்புகிறேன் என்றார் காந்தி. ஆனால் சாதி, மதம், வர்ணாஸ்ரம் உள்ளிட்டவை குறித்து காந்தியின் கருத்துக்கள் தொடக்க காலத்தில் சற்று பிற்கோக்கு தனமாகவும், அடிப்படைவாத தன்மை  கொண்டதுமாக தான் இருந்தது என்பதை
மறுப்பதற்கு இல்லை. ஆனால் கடைசி காலங்களில் முற்போக்குக்கு நேர் எதிரான கருத்துகளை மாற்றி கொண்டே வந்தார் காந்தி. முன்னால் முளைத்த காதை விட பின்னால் முளைத்த கொம்பு பலம் வாய்ந்தது என்பது போல காந்தியின் கடைசி கால கருத்துகள் பிற்போக்குதனத்திலிருந்து மெல்ல, மெல்ல நகர்ந்து முற்போக்கு முகாமை சென்று அடைந்தன. தொடக்கத்திலேயே கூறியது போல் எங்கெல்லாம் சாமானிய மக்கள் ஒடுக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் காந்தியின் கண்டன குரல்கள் எதிரொலித்தது . தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் கிருஷ்ணரின் குழந்தைகளே என நிரூபித்த காந்தி அவர்களை ஹரிஜன் என்றே கடைசிவரை
அழைத்து வந்தார். சாதி அமைப்புக்கும் , தீண்டாமைக்கும் எதிராக காந்தி மேற்கொண்ட முன்னெடுப்புகள் முக்கியமானது " ஹரிஜன் யாத்திரை". 1933 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கி அடுத்த பத்து மாதங்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் நீண்ட யாத்திரை மேற்கொண்டார் காந்தி. அந்த யாத்திரையின் போது, பல இடங்களில் , ஆதிக்க சாதியினர் காந்திக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மறுபுறம் தாழ்த்தப்பட்ட மக்கள் வழி நெடுகளிலும் மலர் தூவி வரவேற்றனர். காந்தி மீதான முதல் கொலை முயற்சி நடைபெற்றது, இந்த ஹரிஜன் யாத்திரையின் போது தான் என்று கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
தாழ்த்தபட்டவர்களுக்கு ஆதரவான என்னுடைய செயல்களால் இந்து மதம் அழிந்தால் அழியட்டும். அதற்காக நான் கவலைபடவில்லை. நான் இந்து மதத்தை காப்பாற்ற வரவில்லை. இந்து மதத்தின் முகத்தை மாற்றவே நான் விரும்புகிறேன். என தீண்டாமை கொடுமைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை பதிவு செய்கிறார் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி.

தாழ்த்தபட்டவர்கள் விவகாரத்தில், காந்தி இழைத்த தவறாக இன்றும் கருதபடுவது அவருக்கும், அம்பேத்காருக்கும் இடையே 1932 ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பூனா ஒப்பத்தம். தாழ்த்தபட்டவர்கள் தங்களது பிரதிநிதிகளை தாங்களே
தேர்வு செய்யும் வகையில் அவர்களுக்கு இரட்டை வாக்குரிமையுடன் கூடிய தனி தொகுதி வழங்கும் கோரிக்கையை அம்பேத்கர் முன் வைத்தார். அவரின் கோரிக்கையை பிரிடிஷ் அரசும் ஏற்று கொண்டது. அதன் படி தாழ்த்தபட்ட மக்களுக்கு ஒதுக்கப்படும் தனி தொகுதிகளில் பிற சாதியினர் வாக்கு அளிக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்டது. ஆனால் இதற்கு காந்தி கடுமையாக எதிர்பை தெரிவித்தார். மேலும் அப்போது எரவாடா சிறையில் இருந்த அவர் உண்ணாவிரத போராட்டத்தையும் தொடங்கினார். உண்ணாவிரத போராட்டத்தால், ஒரு புறம் அவரின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்தது என்றால், மறுபுறம் நாடு முழுவதும் அசாதாரண சூழல் ஏற்பட்டது. இதனால் தாழ்த்தபட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்தார் அம்பேத்கர்.
காந்தி- அம்பேத்கர் இடையே பூனா ஒப்பதம் கையெழுத்து ஆனது. தாழ்த்தபட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு
அப்போதே கிடைத்திருத்தால் தாழ்த்தபட்ட மக்களின் நிலை இத்தனை ஆண்டுகளில் பெரிய அளவில் மேம்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் காந்தி அதற்கு எதிர் அணியில் நின்று, தீண்டாமையை ஒழிக்க சாதியை ஒழிப்பதே மிகச்சரியான தீர்வாக இருக்கும் எனவும், இட ஒதுக்கீடு கேட்டு பெறுவது எந்த விதத்திலும் நிரந்தர தீர்வாக அமையாது எனவும் உறுதியாக நம்பினார் காந்தி. மேலும் வரும் காலங்களில் சாதிய தீண்டாமைகள் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிடும். எனவே
சாதிய ரீதியில் இட ஒதுக்கீட்டிற்கு அப்போது வேலை இருக்காது எனவும் கனவு கண்டார். ஆனால் 75 ஆண்டுகளில் சாதிய விவகாரங்களில் பெரிதாக ஏந்த மாற்றமும் ஏற்படவில்லை. இட ஒதுகீட்டு கோரிக்கைக்கு எதிராக காந்தி செயல்பட்டது நிச்சயம் வரலாற்று பிழை தான் எனவும் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் பலர் இன்றும் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

காந்தி மீதான இடதுசாரிய சிந்தனையாளர்களின் விமர்சனங்களில் முக்கியமானது பகத்சிங்கின் மரண தண்டனையை தடுக்க அவர் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்பது தான். காந்தி நினைத்திருந்தால் , பகத்சிங் உள்ளிட்ட மூன்று பேரின் மரணதண்டனையை நிச்சயம் தடுத்துயிருக்க முடியும். ஆனால் அவர் அதற்கு முயலவில்லை என இன்றுவரை
கூறிவருகின்றனர். ஆனால் தன்னால் முடிந்தவரை அனைத்து விதத்திலும் பகத்சிங்கை காப்பாற்ற காந்தி முயற்சி மேற்கொண்டார் என்றே அவருடைய ஆதரவாளர்கள் தெரிவிதுள்ளனர். பகத்சிங் கைது செய்யபடுவதற்கு ஒரு நாள் முன்னரே அதாவது 1930 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதியே வைஸ்ராய்க்கு காந்தி கடிதம் ஒன்றை எழுதினார். அதில் லாகூர் சதி வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைத்ததை கடுமையாக கண்டித்த காந்தி குறுக்கு வழியில் விசாரனையை முடிக்கும் முயற்சி இது என்றும், இது அடக்குமுறை சட்டத்திற்கு ஒப்பானது என்றும் குற்றம் சாட்டுகிறார். பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு ஆகியோர் கைது செய்யபட்டபோது அவர்களை விடுவிக்க வைஸ்ராய் எர்பினுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொண்டே வந்தார் காந்தி. மேலும் வைஸ்ராய் எழுதிய கடிதம் ஒன்றில் இந்த மூன்று உயிர்கள் காப்பாற்றபடும் பட்ஷத்தில் புரட்சி படையினர் ஆயுதங்களை கைவிட தயாராக உள்ளதாக என்னிடம் உறுதி அளித்ததை உங்களுக்கு தெரியபடுத்த வரும்புகிறேன் என்று காந்தி தெரிவித்தார். தொடர் அழுத்தத்தால் மூவரின் தண்டனையை நிறுத்தி வைக்கலாம் என வைஸ்ராய் எர்பின் நினைத்தார். ஆனால் தண்டனை நிறைவேற்றபடவில்லை என்றால் பஞ்சாப் மஹான ஆளுனரும், அதிகாரிகளும் ஒட்டு மொத்தமாக ராஜினமா செய்வோம் என்று  மிரட்டி வந்ததால் வேறு வழியின்றி 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு ஆகியோர் மூவரும் தூக்கில் இடப்பட்டனர். ஒரு வேளை காந்தியின் முயற்சியால் பகத்சிங்கின் மரண தண்டனை ரத்து செய்ய பட்டிருந்தால் வன்முறைக்கு எதிராக அகிம்சை வழி போராட்டம் அடைந்த வெற்றியாகவே அது கருதபட்டிருக்கும்.
அப்போதும் அகிம்சையே வென்றுயிருக்கும் என்கிறனர் காந்தியின்
தரப்பினர்.

சாதிய விவகாரங்களை போலவே மத விவகாரங்களும், காந்திக்கு அதிக அளவிலான எதிர்புகளையும், அரசியல் எதிரிகளையும் பெற்று தந்தது. சாதிய ரீதியில் பிற்போக்கான கருத்துகளை கொண்டிருந்தாக காந்தி விமர்சிக்கபட்டார் என்றால், மத விவகாரத்தில் நிலைமையே வேறு. இந்து மத தலைவர்கள் காந்தியை இந்து மதத்திற்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டினர். அதே வேளையில் மற்றொரு தரப்பினர் காந்தியை ஒரு இந்துத்துவவாதியாக சித்தரிக்க தொடங்கினர். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே எப்போதும் காந்தி கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் விமர்சனம் செய்தனர். ஆனால் உண்மையில் காந்தி இந்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பாலமாக இருக்கவே விரும்பினார். காந்தி குறித்து முகமது அலி ஜின்னா தெரிவித்த கருத்து ஒன்று இந்த இடத்தில் அவசியம் குறிப்பிட வேண்டும். நான் இஸ்லாமியர்களின் பிரதிநிதி என்கிற முறையில் பேசுவது போலவே காந்தியும் இந்துக்களின் பிரதிநிதியாக பேசினால் அனைத்து சிக்கல்களும் தீர்ந்துவிடும். ஆனால் இந்துகள்,  இஸ்லாமியர்கள் என்ற இரு தரபினர்களின் பிரதிநிதியாகவும் மிஸ்டர் காந்தி செயல்படுவது தான் மிக பெரிய சிக்கல் என்று குறிப்பிடுகிறார் ஜின்னா.
இந்து ஒரு துன்பம் அனுபவித்தால் இஸ்லாமியர் வருத்தபட வேண்டும், இஸ்லாமியர் ஒருவருக்கு துன்பம் நேர்ந்தால் இந்து துயரம் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டார் காந்தி.
இருதரப்பிரும் தவறாக நடவடிக்கைகளில் ஈடுபடும் போது நடுநிலையோடே  கண்டித்தும் வந்தார். உதாரணமாக இந்தியா இந்துகளின் நாடு என்பவர்கள் இந்தியாவில் இருங்கள், ஏற்க மறுப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்ற முழக்கங்களும், பசுவை உண்பவர்கள் மீதான தாக்குதல்கள்
சம்பவங்களும் அப்போதைய சூழலில் அதிகரித்து கொண்டே வந்த நிலையில் அதற்கு எதிராக தன் கண்டனத்தை இப்படி பதிவு செய்துள்ளார் காந்தி.
இந்தியாவில் தாங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என இந்துக்கள் கருதினால் அவர்கள் கனவு காண்பவர்களாக கருதபடுவார்கள்.  இந்தியாவை தாய்நாடாக ஆக்கி கொண்ட இந்துக்களும், கிருத்துவர்களும், இஸ்லாமியர்களும் சகோதரர்கள். அவர்கள் தங்களின் சொந்த நலனக்காக வேனும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பது என் ஆசை. மேலும் எனக்கு பசு மீது மதிப்பு உண்டு, ஆனால் ஒரு பசுவிற்காக என் இஸ்லாமிய சகோதரர் ஒருவரை நிச்சயம் கொலை செய்ய மாட்டேன் என குறிப்பிடுகிறார் காந்தி.

அவரின் இந்த நிலைபாடே அவரின் இந்த எண்ணமே அவரது மரணத்திற்கும் காரணமாக அமைந்து. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, பல்வேறு கருத்து மோதல்களுக்கு பிறகு பாரத நாடு , இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாக பிரிவது, பிரிந்தே தீருவது என்று முடிவானது. ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிவதை எள் அளவும் விரும்பவில்லை காந்தி. தன்னால் முயன்ற அளவு பிரிவினையை தவிர்க்க முயன்றார். ஆனால் அந்த விவகாரம் காந்தியின் கையை மீறி போனது. பாக்கிஸ்தான் இஸ்லாமியற்களுக்கான நாடு என்று முடிவான போது, இந்தியா இந்துகளுக்கான நாடாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்து மத பல தலைவர்களால் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இந்தியாவை இந்து நாடாக்க அவர்கள் தீவரமாக முயற்சித்தபோது, காந்தி தெளிவாக இருந்தார். சொல்லப்போனால்  மிகவும் தெளிவாக இருந்தார். இந்திய நாடு ஒரு மதசாற்பற்ற நாடாகவே இருக்கும் இந்துக்கள், இஸ்லாமியர்கள் என்ற  பாகுபாட்டிற்கு  இந்தியாவில் வேலையே இல்லை என திட்டவட்டமாக அறிவித்தார் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி. இதற்கு எதிரொலியாக வட இந்தியாவில் பல பகுயியில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இந்துக்களும், இஸ்லாமியர்களும் மோதலில், தாக்கதலில், வன்முறையில் ஈடுபட்டனர். இந்த மோதல் சம்பவம் அனைத்தையும் முடிந்தவரை கட்டுபடுத்த முயன்றார் காந்தி. கலவரம் நடைபெற்ற இடங்களுக்கு தனியாகவே சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். தாக்குதலுக்கு உள்ளான இந்துகளின் பக்கமும் , இஸ்லாமியர்களின் பக்கமும் காந்தி நின்று அமைதி காத்தார்.

கல்கத்தா உள்ளிட்ட அவர் சென்ற இடங்களிலெல்லாம் அமைதி ஏற்பட்டது. இந்த அமைதி இந்துத்துவ தலைவர்களின் அமைதியை கெடுத்தது.
விளைவு கோட்சேக்கள் உற்பத்தி செய்யபட்டார்கள். பிரிவினையின் போது இரு நாடுகளுக்கும் உள்ள சொத்துக்கள் பிரிக்கப்பட்ட போது, பாகிஸ்தானுக்கு 75 கோடியை தருவதாக இந்தியா ஒப்புகொண்டது. ஆனால் இருபது கோடி ரூபாய் முதல் தவனையாக கொடுக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 55 கோடி ரூபாயை விரைந்து வழக்க இந்திய அரசை காந்தி வற்புறுத்தினார்.

காந்தியின் இத்தகைய நடவடிக்கைகள்
இந்துத்துவ தலைவர்களை மிகவும் ஆத்திரமூட்டியது. இதன் காரணமாக காந்தியின் உயிரை பரிக்க நாளும் குறிக்கப்பட்டது. காந்தியை கொலை செய்ய பல முறை முயற்சிகள் மேற்கொள்ளபட்டது. ஆனால் அவை எவையும் பலன் அளிக்கவில்லை. இருத்தும் இந்துத்துவ தலைவர்கள் கொலை முயற்சியை கைவிடவில்லை.
காந்தியை கொல்ல தொடர்ந்து திட்டங்களை தீட்டிவந்தனர். அவர்களின் விடா முயற்சிக்கு 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி பலன் கிடைத்தது. அன்றய தினம் பிர்லா மாளிகையில் வழிபாட்டிற்கு சென்று கொண்டிருந்த காந்தியை வழி மறித்து வணங்கிய நாதுராம் விநாயக் கோட்சே என்கிற அந்த நபர் திடிரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காந்தியை நோக்கி சுட்டான். காந்தி வர்ணாஸ்ரம தர்மத்தை தாங்கி படித்தவர். சாதிய கொடுமைகளுக்கு துணை போனவர். உயர் சாதி வகுப்பினரின் பிரதிநிதி தான் காந்தி என்பன போன்ற பல குற்றசாட்டுகளை அந்த குண்டு துளைத்த சென்றது. தங்கள் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என குற்றம் சாட்டியே இந்துத்துவ தலைவர்கள் காந்தியை சுட்டு கொன்றனர். அதாவது
சிறுபான்மையினரின் ஆதரவாளராகவும் , தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதியாகவும் செயல்பட்டார் என்று அந்த படுகொலை சம்பவம்  நடந்ததப்பட்டது. ஆனால் இந்துத்துவவாதிகள் நினைத்தது போல தாழ்த்தபட்ட மக்கள் காந்தியை தங்களை சேர்ந்வராக கருதவில்லை. அதே போல் சிறுபான்மையினரும் பலர் காந்தியை ஏற்று கொள்ளவில்லை. இந்துத்துவவாதிகளும் காந்தியை ஏற்று கொள்ளவில்லை என்பதற்கு நடைபெற்ற கொலையே சாட்சி. அப்படியென்றால் காந்தி யாருக்கானவர். யாருக்கான தலைவர் காந்தி.

காந்தியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் அவர் தன்னை தலைவராக எப்போதும் முன்நிறுத்தியது கொண்டது இல்லை. இந்துகளையோ, இஸ்லாமியர்களையோ , தாழ்த்தபட்ட மக்களையோ, பொதுவுடைமை வாதிகளையோ, மெத்த படித்த மேட்டு குடியினரையோ, இப்படி எவரையும் கவர காந்தி ஒரு போதும் எண்ணியது இல்லை. அவர் நினைத்திருந்தால் ஒரு சார்பு நிலைபாட்டை எடுத்து அதில் மட்டுமே பயணித்து இந்துக்கான தலைவராகவோ, சிறுபான்மையாருக்கான தலைவராகவோ , சொல்லப்போனால் இஸ்லாமியர்களுக்கான தலைவராவோ கூட அவரால் இருந்திருக்க முடியும்.   ஆனால் அவர் உண்மையின் பக்கம் , அகிம்சையின் பக்கமும் எப்போதுமே நின்றார். அரசியலில் மதத்தை புகுத்தி பெரிய தவறை செய்துவிட்டதாக தனது கடைசி காலங்களில் வருத்தம் தெரிவித்தார். குறைகளே இல்லாத , தவறே செய்யாத மகாத்மாவாக தன்னை எப்போதும் கூறிகொண்டதுயில்லை. மகாத்மா என்ற பட்டத்தையும் அவர் ஒரு பொருட்டாகவே கருதியதுயில்லை. காந்தி யாருக்கும் தலைவன் இல்லை. ஆனால் யார் வேண்டுமானாலும் காந்தியை தலைவராக ஏற்று கொள்ளலாம் என்கின்றனர் காந்திய சிந்தனையாளர்கள். காந்தியம் காலாவதியான ஒன்று என்ற  கருத்தையும் மறுகின்றனர். ஒருவர் நம்மை அடித்தால் திருப்பி அடிக்கலாம், நூறு பேர் நம்மை அடித்தால் திருப்பி அடிக்க முயற்சிக்கலாம். ஆனால் நம்மை
அடிப்பவர்கள் ஒடுக்கபடுவர்கள் ஆயிரம் பேராகவோ அல்லது ஆளும் அரசாங்கமோ இருந்தால் அந்த இடத்தில் அகிம்சை தேவை படுகிறது. அந்த புள்ளியில் காந்தியம் தேவைபடுகிறது . அதாவது வீரத்தின் உச்சபட்சம் தான் அகிம்சை. அந்த கூற்றின்படி பார்த்தால் இந்திய சுதந்திர போராட்டத்தின், இந்திய வரலாற்றின் மாபெரும் வீரன் சாட்சாத்
" மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி".
- பாலு

நன்றி:- இணையம்

எழுதியவர் : பாலு (15-Aug-21, 12:26 pm)
சேர்த்தது : balu
பார்வை : 147

சிறந்த கட்டுரைகள்

மேலே