ஒவ்வொரு விடியலும்
ஒவ்வொரு விடியலும்
உன் உயிர்ப்பை உணர்த்தும்
ஒரு அறிவிப்பே ...
நேற்று என்பது முடிந்து போனது
நாளை என்பது நிரந்தரம் அற்றது...
இன்று இந்த நொடி மட்டுமே
உனக்கானது என்பதை
உணர்ந்து உற்சாகமாய்
தொடங்கு...
நாளை என்றொன்று இல்லை
என ஒவ்வொரு நாளையும்
உனக்காக வாழ பழகு ...
உனக்கானதாய் உற்சாகம் கொள்ள
முன் வைக்கும் ஒவ்வொரு அடியும்
உள்ளம் நிறைத்து உனை உந்தி தள்ளும்
முன்னேற்றம் எனும் பாதையில் ...
இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் ( மகோ)
+91 -98438 -12650
கோவை-35