பனியில் உறையும் நிறைவனை - வெண்டாழிசை
பணிவோம் பனியில் உறையும் நிறைவனை
தணிப்போம் நம்குறை வணங்கியே அவனடி
அணைப்பான் நம்மையும் கருணையாய் ---- (1)
மின்னலில் இடியினில் மழையினில் பனியினில்
தென்றலில் ஒலியினில் பிழம்பினில் அனலினில்
ஒன்றியே இருப்பான் இறைவனே ---- (2)
பஞ்சாய் பற்றுவோர் கரங்களில் வருவான்
நெஞ்சில் நினைக்கவே நிறைவாய் அருள்வான்
கொஞ்சும் குழந்தையாய் இறைவனே ---- (3)
ஆடிட நினைத்தே ஆடினால் அவனும்
ஆடியே விரைந்து வந்தே யாரையும்
வாடிடா நிலையில் காப்பானே ---- (4)
மகிழ்வும் துன்பமும் உடையவன் இறைவன்
வகிக்கும் பதவியால் எவரையும் இகழ்வின்
தகிக்கும் அவனின் தண்டனை ---- (5)
----- நன்னாடன்.