நித்தம் உன் நினைவுகள்
நொடி பொழுதும் நினைத்து கொண்டு இருக்கிறேன்
ஒரு நொடியாவது என்னை நினைப்பாயா என்று!
உன் நினைவுகள் என்னும் தூண்டிலில் மீனை போல சிக்கி தவிக்கிறது என் இதயம்.
உயிர் கொடுத்து கைப்பிடித்து கரை சேர்ப்பாயா? இல்லை….
மாய்ந்து போகட்டும் என்று கைவிரித்து கல்லறையில் சேர்ப்பாயா?