மெல்ல நகர்கிறது உலகம்
செல்வமும் செழிப்பும் சேர்ந்தொழுக
சிறப்புடன் அமைதியுடன் வாழ்ந்த
மக்கள் அலை பாயும் அலைகளாய்
அலைந்தோடும் காட்சியின் உச்சக்கட்டம்
கண்முன்னே அநியாயம் அக்கிரமம்
சகிக்க முடியாது குமுறுகிறது நெஞ்சம் ,
என்னவென்று சொல்வது , எங்கே என்று சொல்வது
போர் என்றும் புலம் பெயரும் காட்சிகளும்
நோய் என்றும் நிலைதடுமாறும் மனிதர்களும்
இயற்கையெனும் சீற்றமும்
தேற்றமும் இல்லையே இனி என பரிதவிக்கும்
அப்பாவி மக்களும்,
இறைவனை தேடி, நாடி செல்லும்
தேடல்களும், தேம்புதல்களும்
ஆனாலும் நம்பிக்கை ஒன்றே
நம்மைக் காக்கும் ஒளியாகும் ,
இந்த நம்பிக்கையில் நாளெல்லாம், நாமெல்லாம்,
ஏக்கத்துடன் உலகின் முழுமையும்
மெல்ல மெல்ல நகர்கிறது.....
,