நட்புடன் நான்

நட்பே நீ இல்லாத எந்தன்
வாழ்க்கை நில்லாது
பொய்மையை உரைத்தாய் நீ என்தன்
உண்மையையும் எடுத்துரைத்தாய்
துன்பத்தில் தோள் கொடுத்தாய் இன்பத்தில்
விலகி நின்றாய்
உயரப் பறந்தேன் என்றென்றும் என்
நிழலாய் நீ வேண்டும்
கனிவோடு பார்த்தாய் இரக்கம் என்னும்
உணர்வை தூண்டினாய்
கோவமாய் பார்த்தாய் எந்தன் தவறுகளை
உணரச் செய்தாய்
புன்னகையோடு பார்த்தாய் வெற்றிக் கோடியை
நாட்டச் செய்தாய்
நவரசத்தையும் உன்னில் காட்டி என்னை
உளியாக செதுக்கினாய்
நான் பெற்ற வெற்றியை உன்னோடு
பகிர்ந்து கொள்ள
என்றும் எனக்கு தோள்கொடுப்பாய் நம்பிக்கையில் நட்புடன் நான்....

எழுதியவர் : பிரதீஷ் நாகேந்திரன் (26-Aug-21, 10:59 am)
Tanglish : natbudan naan
பார்வை : 1082

மேலே