காதல் புன்சிரிப்பு

காதல் புன்சிரிப்பு.

புன்சிரிப்பில் பூத்த மலர்
பூக்களிலே சிறந்த மலர்,

பூக்களிலே சிறந்த மலர்
பூ ஒன்று கிடைத்து விட்டால்,
புது உயிர் பெற்று விடும்
மனம்,

புது உயிர் பெற்ற மனம்
புது உலகம் கண்டு விடும்,

புது உலகம் கண்ட மனம்
புதுமைகள் படைத்துவிடும்.

இதுவே காதல் என்றால்
இந்தப்
புன்சிரிப்பு தொடரட்டும்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (27-Aug-21, 7:26 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : kaadhal punsirippu
பார்வை : 174

மேலே