அறிவுடையோர் விரும்பிச் சேரமாட்டார்கள் – திரிகடுகம் 14
இன்னிசை வெண்பா
இழுக்கல் இயல்பிற் றிளமை பழித்தவை
சொல்லுதல் வற்றாகும் பேதைமை யாண்டும்
செறுவொடு நிற்குஞ் சிறுமைஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார். 14 – திரிகடுகம்
பொருளுரை:
பொதுவாக இளமைப் பருவம் தவறான செயல்களைச் செய்யும் இயல்புடையது;
அறியாமை அறிவுடையோரால் தவறு என விலக்கப்பட்டவைகளைச் செய்யும் செயல்களில் வல்லமை யுடையதாகும்;
எக்காலத்தும் சினத்தோடு நிற்பது ஈனத்தன்மை ஆகும்.
ஆகவே இம் மூவகைச் செயல்களையும் பின் விளைவுகளை அறிந்த அறிவிடையார் செய்ய எண்ண மாட்டார்கள்.
கருத்துரை:
இயல்பாக வழுவுதலை உடையது இளமைப்பருவம்;
பிறர் வெறுப்பவைகளைச் சொல்லுதல் மூடத்தனம்;
எப்போதும் சினத்தோடிருப்பது சிறுமை;
இவை ஒருவனுக்கு இருந்தால் பெரியோர் அவனைச் சேரார்.
இழுக்கல் – வழுக்குதல்
சிறுமையுடன் செறுவும் உடன் நிகழ்தலால், உடன் நிகழ்ச்சிப் பொருளுமாம்,