காதல்

என்னவனே...
எனக்காகப் பிறந்தவனே...
என் வாழ்வின் வசந்தமே...
என்னுள்ளே...
என்று நுழைந்தாய்???
எனக்கே தெரியவில்லை...
ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கிறது...
அத்தனையும் உன்பேர் சொல்கிறது...
உன் மெல்லிய புன்னகை
என்னை மெய்மறக்கச்செய்கிறது...
உன் மௌனம் என்னுள்
ஆயிரம் கவிதைகள் மொழிகிறது...
நித்தம் உன் நினைவென்னும்
கடலில் நீந்திக்கொண்டிருக்கிறேன்...
என்று உன்னுடன் திருமணமென்னும்
கரையை அடைவேனோ???
காத்திருக்கிறேன்...
உன்னை எண்ணிப் பூத்திருக்கிறேன்...

எழுதியவர் : புனிதா சரவணன் (6-Sep-21, 10:26 pm)
சேர்த்தது : புனிதா சரவணன்
Tanglish : kaadhal
பார்வை : 330

மேலே