காதல் கடிதம்
நான் உனக்கு எழுதிய
"காதல் கடிதங்கள்" எல்லாம்
விலாசம் இல்லாத
கடிதங்களை போல்
திரும்பி வந்து விட்டது ..!!
ஆனால்..
அவையெல்லாம்
இன்னும் பாதுகாப்பாக
என் நெஞ்சுக்கூட்டில்
அனாதையாக
உறங்கிக்கொண்டு இருக்கு ...!!
ஒன்று மட்டும் நிச்சயம்
கோழைகளின் மனதில்
"காதல்" பிறக்கக்கூடாது
மீறி பிறந்து விட்டால் ..!!
அந்த "காதல்"
அனாதையாக
ஆதரவுயின்றி இருக்கும்
குழந்தையை போல்தான் என்று
உணர்ந்து கொண்டேன் ...!!
--கோவை சுபா