அவள் மலரிதழை முத்தமிட்டபோது
அவள் மலரிதழை
முத்தமிட்டபோது
சிந்தியது மலர்
சில தேன் துளிகளை
நன்றியில்
அவள் சுவாசம்
தந்த குளிர்ச்சியில்
அவள் காதில் வந்து
நன்றி நவின்றது
தென்றல்
அவள் புன்னகை முகம்
கண்ட மகிழ்ச்சியில்
நாளை மலரும் மொட்டுக்கள்
இன்றே மலர்ந்தன
அழகில் அன்பில்
புன்னகையில்
அவள் அருகில் வந்த போது
அகர முதல எழுத்தெல்லாம்
கட்டாயம் நீ ஒரு கவிதை
எழுத வேண்டுமென்று
கைகூப்பி நின்றன