எண்ணத்தை நாறடிக்காதே

எண்ணத்தில் கூவத்தை விடாதே

நேரிசை வெண்பாக்கள்

எண்ணத்தை யேதோ எழுதுவா னென்றுதேட
எண்ணமொன்றும் காணேன் எழுதியதை --- எண்ணமென்று
அக்கிரமாய் யாதோ அனத்துகிறான் யாருமதை
வக்கிரமென் றேசாவிட் டார்

எண்ணமென்றே யோர்சிவ லிங்கம் படம்போட்டு
எண்ணத்தின் பாட்டை எழுதவில்லை -- கண்ணதாசன்
பாட்டெனத் தேடினேன் காணவில்லை கேட்டதைபா
ராட்டென ஏத்துகிறார் பார்

எண்ணமது வேசரியில் லைபா ரதையென்றேன்
கண்ணாய்பா ராட்டாய் கணக்கிட்டார் -- எண்ணத்தில்
சாக்ரடீஸ் பின்னர் அரிஸ்டாட்டில் பார்சிலர்
சாக்கடைநீ ரைநிறுத்தப் பா

தளத்தில் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதிளித்தார் சொல்ல தயங்குபவரை
எதற்காக அனுமதிக்க வேண்டாம்
ஒருநபர் வயதைக் குறிப்பதில்லை. ஆனா பெண்ணா ககுறிப்பதில்லை ஊரைக் குறிப்பதில்லை. சிலர் பெயரை மட்டும் குறித்து உள்ளே ரசாங்கம் நடத்துகிறார். ஏன் இந்த பாரபட்சம்.. அவருடைய படிப்பு தகுதி அவரைப்பற்றி கொஞ்ச விவரமாவது வேண்டாம்
காதல் என்று தலைப்பு கொடுத்து உள்ளேயும் காதல என்று முடிக்க அதை நூறு பேர் பார்க்க
உற்சாகமாய் அதே பாணியில் உளருகிறார். தணிக்கைக்கு உட்படுத்த நல்லது என்று கருது கிறேன்.சுயவிவர த்தில் ஏதோ கிறுக்குவேன் என்று நுழந்தவரை கணக்கிடுங்கள் ஏராளம் பேர்.

எண்ணத்தில் சிலர் அருமையாக எழுதி வர படித்தோம் ரசித்தோம்.
அதிலும் இப்போது சில சாக்கடைகள் ஏதோ மேதாவிகள் போல கூவச்
சாக்கடை நீராய் உள்ளே புகுந்தது நாசம் செய்து படிப்பவர்
மனதை புண்படுத்த கிறார். கமெண்டில் அதை கண்டிக்க
எழுத்து தளமோ எந்திர கதியில் அவரை பாராட்டியதாக
கணக்கை கூட்டி காட்டு கிறது. படித்து பார்த்து வெளியிட வேண்டாமோ?
எண்ணத்தில் எழுத வரை குறை ஏற்படுத்த வேண்டும்.

எழுதியவர் : பழனி ராஜன் (15-Sep-21, 8:11 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 75

மேலே