நின்ற புகழுடையார் மூவர் – திரிகடுகம் 30

இன்னிசை வெண்பா

தன்னச்சிச் சென்றாரை யெள்ளா வொருவனும்
மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்
என்றும் அழுக்கா றிகந்தானும் இம்மூவர்
நின்ற புகழுடை யார் 30

- திரிகடுகம்

பொருளுரை:

தன்னை விரும்பி அடைந்தவரை இகழாத ஒருவனும், மிகுந்த செல்வம் வந்த காலத்தில் மறதியை நீக்கினவனும், பிறரிடத்துப் பகைமை யுண்டாகிய காலத்திலும் அவரது செல்வங் கண்ட இடத்து மகிழாமையைக் கடந்து நீங்கினவனும் ஆகிய இம் மூவரும் அழியாப் புகழுடையார்.

கருத்துரை:

தன்னை மதித்து வந்தவரை இகழாமல் ஏற்றுக் கொள்வதும், செல்வம் சிறந்த காலத்தும் நண்பர் முதலியவர்களை மறவாமல் போற்றுவதும், பிறன் வாழ்வுக்கு மகிழ்வதும் புகழுக்குக் காரணமானவை ஆகும்.

எள்ளா - எள்ளாத, இகத்தல் - கடத்தல். நின்ற - நிலைபெற்ற.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Sep-21, 4:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே