மல்லிகைச் சம்பா அரிசி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மல்லிகைச்சம் பாஅரிசி வாய்க்குரிசி யாயிருக்கும்
நல்லது மெய்க்கு நலஞ்செய்யும் - பொல்லாக்
கரப்பானை மேகத்தைக் கண்அழலை நீக்கும்
உரப்பாம் பலங்கொடுக்கும் உண்

- பதார்த்த குண சிந்தாமணி

இதனை உண்டால் உடற்சுகம், உறுதி இரண்டையும் தரும்; கரப்பான், பிரமேகம், கண்சூடு இவற்றைப் போக்கும்; சுவையைக் கூட்டும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Sep-21, 9:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே