எருமைச் சாணி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வயிற்றுப் பிசமிரத்த வாந்திகா மாலை
நியத்தபெரும் பாடுபுண் நீங்கும் - வியத்த
கருமைச்சா ரங்கவிழிக் காரிகையே நாளும்
எருமைச்சா ணத்தின் இயல்பு

- பதார்த்த குண சிந்தாமணி

இது வயிற்றுப் பொருமல், ரத்த வாந்தி, காமாலை, பெரும்பாடு, புண் இவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Sep-21, 7:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே