அன்னையே மனச்சாட்சி
அன்னையே மனச்சாட்சி
உள்ளத்தில் அமர்ந்திருப்பாள்,
உண்மையே பேசிடுவாள்,
உன் தப்புக்கெல்லாம்,
உடனுக்குடன் கோடிடுவாள்.
காவடியும் எடுக்க வேண்டாம்,
காலணியும் தேய
வேண்டாம்,
அன்னை சொல்
கேட்டால்,
அமைதி அடையும்
உன் மனம்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.