அசிங்கங்கள் படுத்தாதீர்
அசிஙகப் படுத்தாதீர்.
அழகிய கோபுரம்
அமைத்து,
ஆண்டவன் புகழ்
பாடும்,
சிற்பங்கள் அடுக்காக
அங்கு வைத்து,
உன்னை வணங்கியே
உள் செல்லட்டும் என, உயரமாகவே உன்னை
எழுப்பினார்,
அரசர்கள் அன்று.
ஆனால் நாம்
பார்ப்பதெல்லாம்,
பலவர்ணம்
உனக்குப் பூசி,
குழாய் அங்கு
ஒன்று கட்டி,
உன் காதும்,
நம் காதும் அடைக்க
ஊளையிட்டே,
உன் அழகை!
அசிங்கப்படுத்தும்
காட்சியன்றோ!
கேட்பதற்கு யாருமில்லை?
என நீ முணங்குவது
எவர் காதிலும் ஏறாது!
முணங்குவதை நிறுத்தி
ஊளையை ரசித்துவிடு.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.
.