காந்தச் சிந்தூரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
காந்தச்சிந் தூரத்தைக் கண்டவுடன் உந்திவலி
போந்தவதி சாரசுரம் போவதன்றி - வாந்திகப
காசசு வாசவினை காமாலை பாண்டுவொடு
பூசலிடு நோயனைத்தும் போம்
- பதார்த்த குண சிந்தாமணி
இது உந்தி வலி, சுரம், வாந்தி, சயம், இருமல், இரைப்பு, காமிலம், பாண்டு, வேறு பல நோய்கள் இவற்றைக் குணமாக்கும்