காந்தச் சிந்தூரம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

காந்தச்சிந் தூரத்தைக் கண்டவுடன் உந்திவலி
போந்தவதி சாரசுரம் போவதன்றி - வாந்திகப
காசசு வாசவினை காமாலை பாண்டுவொடு
பூசலிடு நோயனைத்தும் போம்

- பதார்த்த குண சிந்தாமணி

இது உந்தி வலி, சுரம், வாந்தி, சயம், இருமல், இரைப்பு, காமிலம், பாண்டு, வேறு பல நோய்கள் இவற்றைக் குணமாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Sep-21, 8:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே