கண்ணா உந்தன் நீலநிறம்தான் நிஜம்
கண்ணா நீல வானைக் காணும்போது
உந்தன் நீலமேனி அதில் தெரிகிறது
கடலைக் காணும்போது கண்ணா அதில்
உந்தன் கருநீல உடல் வண்ணம்
தோய்ந்திருக்க காண்கின்றேன் அதோ
கானகத்தில் மழைமேகம் கண்டு ஆடும்
தோகை மயிலில் அதன் இறகில்
உந்தன் நீல நிறம் காண்கின்றேனே
கண்ணா கருநீலம் தான் நீவிரும்பும் நிறமோ
அதனால் தான் அதை வானவில்லில்
சேர்க்காது விட்டுவிட்டாயோ ரகசியமாய்
ராதையை உன்னோடு சேர்த்து காட்டாதது போல k