முடியும்
"எலியாகி' கணபதியை துதிக்க முடியும் ,
'புலியாகி' ஐயப்பனை சுமக்க
முடியும் ,
'சிம்மமாகி' அம்பாளை நினைக்க முடியும் ,
'பசுவாகி' சிவனிடம் இருக்க முடியும் .
'மயிலாகி' கந்தனிடம் வசிக்க முடியும்,
'நாகமாகி' திருமாலை ரசிக்க முடியும்,
'அன்னமாகி' திருமகளை நெருங்க முடியும்,
'யானையாகி' இந்திரனை வணங்க முடியும்.
'கிளியாகி' மீனாட்சியை கொஞ்ச முடியும்,
'கருடன்' ஆகி கண்ணனை
அடைய முடியும்,
'சேவல்' ஆகி குமரனை அழைக்க முடியும்,
'சிலந்தியாகி' சிவன் அருளை பெற முடியும்,
'அணில்' ஆகி இராமரிடம் உருக முடியும்.
மனிதனாகி ?