கருவில் சுமந்தவளின் கண்ணீர் துளி
🖋️கருவில் சுமந்தவளின் கண்ணீர் துளி 💧
நான் ஏழு பிள்ளைய பெத்து எடுத்த
எல்லாத்தையும் வளத்து ஆளக்குனா
என்ன கட்டினவன் சேர்த்து வைத்த சொத்து தான்
அவர் கல்லறைக்குப் போனதும்
அத்தனையும் என் பேர் மேல தான் எழுதி வெச்சிட்டு போனாரு
காரணமாய் எழுதி வச்ச மனுஷன் காத்தோடு போக
நான் கருவில் சுமந்து பெத்து அதையெல்லாம் கரை சேர்த்துவிட நானும்
எனக்கு ஆண் பிள்ளை ஒண்ணுதான்
பட்டினி இல்லா புள்ள கிட்ட பசியோட போய் நின்னா
அங்க வீட்டுல என்னமோ கறிசோறு தான்
எனக்கு மட்டும் வெள்ளை சாதத்தில் வந்து விழுந்தது பச்சத்தண்ணி
நான் கண் கலங்கி கைகழுவி எழுந்து வந்துட்டேன்
நாம கையேந்த நாளும் இந்த கஞ்சியை வேணான்னு
தட்டிக் கேட்க வரும்னு நினைச்சே ஆறு பொட்டபுள்ளையும்
என் சொத்தை எல்லாம் பிரிச்சி வாங்கிட்டு போறது பாரு
மடத்தனமா நான் இருந்தாலும் அவங்க மதிக்கு எட்டல பாரு
நாளைக்கு உங்களுக்கும் என்னைப்போலவே வயசாகும்.
எழுத்து
ரவிசுரேந்திரன்