பிரிந்தார் பிறைசூடன் - 08102021

பிறைசூடனே உமது பெயரே பெரிய பேரு
பிறந்தாய் நன்னிலத்தில் ஐம்பத்தாறிலே (1956)
சிறை படத்திலே பாடலை இயற்றி அறிமுகமானாய்
இதயம் படத்தில் இதயமே என்று உருகவைத்தாய்
நூறு வருடம் மாப்பிள்ளை பெண்ணை வாழ வைத்தாய்
சோல பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே என்றாய்
ஆட்டமா தேரோட்டமா என்று அதிரவிட்டாய்
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி என்றும் எழுதினாய்
வெத்தல போட்ட சோக்குல என மல்லுகட்டினாய்
சிறுவாணி தண்ணி குடிச்சு என்று பெருமை சொன்னால்
குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் என்று மிரட்டினாய்
பல ஆயிரமாய் பாடல்களை எழுதியே மனம் புகுந்த நீ
பிறை தேய்ந்த நிலவாய் இன்று மறைந்தது ஏனோ
மறை தமிழால் வானளவு உயர்ந்தோய் புகழால்
தமிழுள் உயிர்ப்பாய் வாழ்வாய் ஞாலம் உள்ளவரை
வாழ்க வாழ்கவே வானத்து முழுநிலவாய்.
---- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (8-Oct-21, 11:21 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 155

மேலே