நடை பயில வா காதலியே

♥மிரட்டும் பெரும் பேய் மேகக்கூட்டம்
புரட்டும் பெருங்காற்றும் வரக்கூடும்
கூரையில்லா வீட்டுக்
குழந்தைகளின் குதூகலம் தொலைய வேண்டாம்....
கூடுல்லா பறவைகளின் கூக்குரலும் எழவேண்டாம்...
விதைத்தவன் வெள்ளாமை வீடுவந்து விழவேண்டும்...
புதுநெல் வாசம் பிடித்து பூரிப்பில்தான் அவன் அழவேண்டும்..
பூமியை தாலாட்டும் கான மழை போதும்...கனமழை வேண்டாம்...
உன் பூப்பாதம் பெயர்த்து அவிழ்ந்த கூந்தலோடு வீதியுலா வாயேன் நீ...
உன் கூந்தல் கோதும் ஆவலிலாவது மூர்க்கம் துறந்து
தென்றலாய் தேசம் கடந்து
போகட்டுமே புயல்.!♥

எழுதியவர் : அரும்பூர் குரு (10-Oct-21, 11:14 am)
சேர்த்தது : ARUMBOOR GURU
பார்வை : 114

மேலே