இயற்கைகாவிரியில் கலக்கும் மாசு

படிகம்போல் நிர்மலமாய்ப் பாய்ந்துவந்த காவிரி
நீர்பாய்ந்த காலம் போயே போனதோ
இன்று புனித நீரை மாசு படுத்தும்
மனிதர் நீரில் நச்சுப் பொருளாம்
பயன் கழிந்த மருந்து மாத்திரை
மற்றும் வகையறா கழிவுகளைக்
தயங்காது கலக்கின்றாரே அந்தோ பரிதாபம்
வாழவைக்கும் இயற்கையை அறிந்தும் அறியாதது போல
மடமையில் அறிவிலியாய் செய்யல் புரியும் மனிதர்...
இயற்கையோடு இயங்கி செயல் புரிய
வாழ்வாங்கு வாழவைக்கும் இயற்கை அதற்கெதிராய்
இயங்கிட அழித்துவிடும் ஒருநாள் நம்மை இயற்கை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Oct-21, 10:29 am)
பார்வை : 83

மேலே