கற்சிலைக்கு பின்னால்
கல்லிலே வடிவம் கொண்ட
கற்சிலையோ சிரிக்கின்றது..!!
சிரிக்கின்ற சிலைக்கு பின்னால்
உளியிடம் அடி வாங்கியதை
நினைத்து கல் அழுதது..!!
சுத்தியால் அடி வாங்கியதை
நினைத்து உளியும் அழுதது...!!
மனிதனோ
சிலையின் அழகை
பார்த்து ரசிக்கின்றான்...!!
ஆனால்
சுத்தியலையும் உளியையும்
வைத்து சிற்பம் வடித்த சிற்பியை
எல்லோரும் மறந்து விடுகிறார்கள் ...!!
சிலர் சிரிப்பார்
சிலர் அழுவார்
சிலர் ரசிப்பார்
என்பது இதுதானோ ...!!
--கோவை சுபா