✉️மகளுக்கு ஒரு மடல்📝
உன் மழலை சிரிப்பாலே
அனைவரையும்
மகிழ்ச்சி அடையச் செய்தாய்.......
அன்பாக பழகி
அனைவரையும் உன்னுடன்
அள்ளிச் சென்றாய்.......
அரவணைத்து அரவணைத்து
அருகில் நிலைபெற்று
இருக்கச் செய்தாய்.......
முத்தத்தினால்
உன் அன்பை
அறியச் செய்தாய்........
அகிலமும் நீயென
அத்தனையும் நீயென
உணரச் செய்தாய்......
அழகிய சிரிப்பில்
கவலைகளை
மறக்கச் செய்தாய்.........
அனைவரையும் வென்று
பொறாமையில்
மூழ்கச் செய்தாய்.......
இறுதியில் மருமகளாய்
சென்று பெருமிதம்
அடையச் செய்தாய்........
என்னை பாட்டியாக்கி
பன்மடங்கு
மகிழச் செய்தாய்.........
என் அன்பு மகளான
உன்னக்கே - என்னை
மடல் எழுதச் செய்தாய்.........