ஆவாரைப் பஞ்சகம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மோகத்தி னாலே விளைத்தசலம் வெட்டையனல்
ஆகத்தின் பிண்ணோ டருங்கிராணி - போகத்தான்
ஆவாரைப் பஞ்சகங்கொள் அத்திசுரம் தாகமும்போல்
ஏவாரைக் கண்மடமா தோ?

- பதார்த்த குண சிந்தாமணி

ஆவாரை வேர், இலை, பூ, காய், தண்டு ஆகிய ஐவகை அங்கங்களால் பிரமேக மூத்திரம், வெள்ளை, உட்சூடு, இரணம், வாதகிராணி, சுரம், தாகம் இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Oct-21, 9:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே