சங்கஞ்செடி சமூலம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வீக்கங் கரப்பான்தா கங்கிரந்தி புண்குன்மம்
ஊக்கமிகு சூலைவாய் வோடுபித்தந் - தாக்குவிஷம்
வீறுமோ கண்துலங்கும் வீசுபசி ரத்தமுண்டாங்
கூறுசங்கம் வேரிலை கட்கு

- பதார்த்த குண சிந்தாமணி

முட்சங்கம் வேர், இலை இரண்டும் சோகை, கரப்பான், தாகம், கிரந்தி, புண், குன்மம், கீல் வீக்கம், வாத பித்த நோய்கள், பல்வகை நஞ்சு, ஆகியன நீங்கும்; கண்ணொளி பெறும்; மிகுந்த பசியுண்டாகும்; இரத்தம் பெருகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Oct-21, 9:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே